Tuesday, 21st May 2024

ebook தொடர்புக்கு : +91 - 9444983174

ஆவின் பாலகம் திறப்பு

ஜனவரி 12, 2021 12:10

திருநெல்வேலி : பாளையங்கோட்டை மண்டலம் பெரியார் நகரில்,புதிதாக  ஆவின் பாலகத்தினை மாவட்ட மத்திய கூட்டுறவு வங்கித் தலைவர் கணேச ராஜா திறந்து வைத்தார்.

 திருநெல்வேலி மாவட்ட பால் உற்பத்தியாளர்கள் கூட்டுறவு ஒன்றியமான, நெல்லை ஆவின் நிறுவனத்தின் சார்பில்,  பாலகம் திருநெல்வேலி மாநகராட்சி, பாளையங்கோட்டை மண்டலம், பெரியார் நகரில், திறந்து வைக்கப்பட்டது.

மாவட்ட மத்திய கூட்டுறவு வங்கியின் தலைவரும், மாநகர் மாவட்ட அஇஅதிமுக செயலாளருமான "தச்சை" என்.கணேச ராஜா, புதிய பாலகத்தை திறந்து வைத்து, ஆவின் பால்  மற்றும் பால் பொருட்கள் விற்பனையையும் துவக்கி வைத்தார். விற்பனையாளர்களுக்கு சான்றிதழ்களும் வழங்கினார். அத்துடன் , ஆவின் பாலகம் சார்பாக தயாரிக்கப்பட்டுள்ள, 2021 கூட்டுறவு தினசரி காலண்டரையும், வெளியிட்டார்.

அப்போது அவர் பேசுகையில், " குழந்தைகளின் எலும்பு வளர்ச்சிக்கு பெரிதும் உகந்ததும், கால்சியம் சத்து நிறைந்ததும், கலப்படம் சிறிதும் இல்லாததும், தீமை பயக்கும் பாக்டீரியாக்கள்  முற்றிலும், கட்டுப்படுத்தப் பட்டதுமான ஆவின் பால் மற்றும் அதனுடன் இணைந்த பால் பொருட்களை வாங்கி, நமது மாவட்ட பால் உற்பத்தியாளர்களுக்கு உதவிட வேண்டும்!" என்று  கேட்டுக் கொண்டார்.

இந்நிகழ்ச்சியில், கூட்டுறவு சங்க துணை தலைவர் ஜெய்கோபி கிருஷ்ணன், வரவேற்புரை நிகழ்த்தினார். கூட்டுறவு சங்கங்களின் மண்டல இணைப்பதிவாளர் அழகிரி,  வாழ்த்துரை வழங்கினார். ஆவின் நிறுவன, விற்பனை பிரிவு பொது மேலாளர் அனுசியா, ஆவின் செயல்பாடுகளை பற்றி பேசினார். கூட்டுறவு சங்க இயக்குநர் சுப்பிரமணியன் நன்றி கூறினார்.

தலைப்புச்செய்திகள்